தமிழர்களின் விளையாட்டு கபடி என்று சொல்லும் போதே நமக்கு மெய்சிளுகின்றது. அதனின் வரலாறு, கபடி பாடல், விதிமுறைகள், மற்றும் புரோ கபடி லீக் இவைபற்றி நாம் இப்போது காணலாம்.
கபடி விளையாட்டு
கபடி தமிழர்களின் விளையாட்டு என்று சொல்லலாம். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பு உருவானது. இளவரசர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கச் சுயம்வரங்களில் இந்த விளையாட்டை விளையாடுவார்கள். அவர்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாகக் கபடி இருந்தது. இப்பொழுதும் நம் ஊர் திருவிழாக்களில் இளைஞர்கள் ஒன்று கூடி விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். இரு அணிகளுக்கு இடையே தீவிரமாகப் போட்டி நடக்கும். இதைக் காண ஊரே திரண்டு இருக்கும். கபடி இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி விறுவிறுப்பாகவும் ஆரவாரமாகவும் நடைபெறும். வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்தவர்களைச் சிறந்த வீரர்களாகக் கருதுவார்கள். இது தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தெற்கு ஆசியா நாடுகளில் பெரும் அளவில் நடைபெறுகிறது. இதைக் கொண்டே கபடி உலகக் கோப்பை தொடங்கப்பட்டது.
கபடி போட்டி உருவான வரலாறு
கபடி விளையாட்டு உருவான கதைபற்றி வியப்பாகத் தான் உள்ளது. ஒரு வீர விளையாட்டில் பங்கேற்பதற்காகக் கபடி விளையாட்டு அறிமுகமானது. புரியவில்லையா? நம் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் பயிற்சிக்காகக் கபடி விளையாடப்பட்டது. ஏறு தழுவுதல் வீரர்கள் ஒன்று கூடி இரு அணியாகப் பிரிந்து விளையாடத் தொடங்குவார்கள். ரைடர் (rider) அணி டிபெண்டர் (defender) அணியைக் காளை மாட்டைப் போல் என்னி அவர்களைப் பிடிக்கச் செல்வார்கள். டிபெண்டர் அணி வரும் ரைடரின் கையில் மாட்டாமல் தப்பித்து கொள்ள வேண்டும். ரைடர் அணி பிடித்து விட்டால் அவர்களுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். இதுவே கபடி ஆட்டமாகும்.
காளை+பிடி அல்லது கை+பிடி என்பது காலப்போக்கில் கபடி என்றாயிற்று. கபடியை சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று மக்கள் அழைக்கின்றனர். இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது. கபடி ஆடும் வீரர் எதிரணிக்கு செல்லும்போது கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். கபடிக்கு என்று சில பாடல்களும் உள்ளன. எதிரணியை மேற்கொள்ளும் வீரர் இந்தப் பாடல் பாடுவதை நாம் கேட்க முடியும்.
Also, Read ஐசிசி டி20 சிறந்த கிரிக்கெட் வீரர்கள்
“நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்க சிலம்பெடுத்து
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.
கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா…”
கபடி விளையாட்டின் விதிமுறைகள்
ஆடுகளம்:

- கபடி களமானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேறுபாடும்.
- ஆண்கள்: 13 மீ. x 10 மீ. பரப்பு அளவில் இருக்க வேண்டும்.
- பெண்கள்: 11 மீ. x 8 மீ. பரப்பு அளவில் இருக்க வேண்டும்.
- ஆடுகளமானது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும். ஆடுகளத்தின் நடுவில் ஒரு கோடிட்டு அதை இரண்டாகப் பிரிப்பார்கள்.
- இதை உட்புற விளையாட்டாக விளையாடுவார்கள். கபடி களமானது மாட் (mat) அல்லது மணல் மற்றும் மரத்தூள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் நடுக்கோட்டிற்கு இரு புறமும் இருந்து விளையாடுவார்கள்.
வீரர்களின் எண்ணிக்கை:
கபடி போட்டியில் களத்தின் உள்ளே 7 வீரர்கள் இருப்பார்கள். இரண்டு அணிக்கும் 14 வீரர்கள் விளையாடுவார்கள். மற்றும் இரு அணிகளுக்கும் 5 வீரர்கள் என்ற கணக்கில் 10 வீரர்கள் களத்தின் வெளியே இருப்பார்கள். இவர்கள் களத்தின் உள்ளே இருக்கும் வீரர்களுக்கு ஏதேனும் காயம் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட்டால் களத்தில் மாற்று வீரராகக் களமிறங்குவார்கள். ஆக மொத்தம் ஒரு அணிக்கு 12 வீரர்கள் போட்டியின்போது இருப்பார்கள்.
கபடி நடுவர்கள்:
மற்ற போட்டியைப் போல் இல்லாமல் கபடி விளையாட்டிற்கு 5 நடுவர்கள் இருப்பார்கள். இதில் 2 நடுவர்கள் களத்தின் நடு பகுதியில் எதிர் எதிரே இருப்பார்கள். 2 நடுவர்கள் களத்தின் முடிவு பகுதியில் எதிர் எதிரே நிற்பார்கள். மற்றும் ஒரு நடுவர் களத்தை வளம் வந்து கொண்டு இருப்பார். நடுவர்களுக்கு வீரரைப் போட்டியில் இருந்து நீக்கும் உரிமை, எச்சரிக்கை தருவது, மற்றும் புள்ளிகளை அறிவிப்பது போன்ற செயல்களைச் செய்வார்கள்.
கபடி நேரம்:
கபடி போட்டியானது 40 நிமிடங்கள் நடைபெறும். முதல் 20 நிமிடம் முதற்கட்ட ஆட்டமும் அடுத்த 20 நிமிடம் இரண்டாம் கட்ட ஆட்டமும் நடைபெறும். இதற்கு நடுவில் 5 நிமிடங்கள் இடைவேளை வழங்கப்படும்.
ஒவ்வொரு அணியும் ஒரு போட்டிக்கு 90 வினாடிகள் ஒரு “டைம் அவுட்” எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த நேரத்தைக் கேப்டன், பயிற்சியாளர் அல்லது நடுவரின் அனுமதியுடன் அணியில் விளையாடும் எந்த உறுப்பினரும் கோரலாம். டைம் அவுட் போது, போட்டியின் கடிகாரம் இடைநிறுத்தப்பட்டு, அடுத்த ரெய்டின் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும், இது நடுவர் விசில் அடித்தவுடன் தொடங்கும்.
டைம் அவுட் நேரத்தில் அணிகள் மைதானத்தை விட்டு வெளியேறக் கூடாது. ஏதேனும் மீறல் ஏற்பட்டால், எதிரணி அணிக்கு technical புள்ளி வழங்கப்படும். ஒரு வீரருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, வெளியாட்களால் குறுக்கீடு ஏற்பட்டாலோ, மைதானத்தை மீண்டும் லைனிங் செய்தாலோ, அல்லது இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டாலோ, நடுவர் அதிகாரப்பூர்வ டைம் அவுட் தரலாம்.
கபடி விளையாடுவது எப்படி?
போட்டியின் தொடக்கம் உறுதிப்படுத்த டாஸ் போடப்படும், டாஸ் வெல்லும் அணி தங்களுக்கு விருப்பமான ரைடர் அல்லது டிஃபெண்டர் தேர்வு செய்யலாம். மூச்சு விடாமல் ‘கபடி கபடி’ என்று சொல்லிக் கொண்டே செல்ல வேண்டும். இதற்குப் பாடுதல் என்று சொல்லப்படுகிறது.
எதிரணியின் களத்திற்கு கபடி கபடி என்று பாடி கொண்டு செல்லும் வீரர் ரைடர்(Rider) என்றும், தன் களத்தின் எல்லைக்குள் வரும் வீரரைப் பிடிப்பவர் டிஃபெண்டர்(Defender) என்றும் செல்லப்படுவார்கள். ஒரு ரைடர் எதிரணி களத்தினுள் சென்றால் 30 நொடிகளில் எதிரணி வீரரைத் தொட வேண்டும் அல்லது களத்திலுள்ள இறுதி கோட்டை தொட வேண்டும். கபடி போட்டியில் புள்ளிகள் ரைடர் மூலமும், டிஃபெண்டர் மூலமும் கணக்கிடப்படும்.
ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் பாடி கொண்டு நடுக்கோட்டை தொட்டுவிட்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிரணி வீரர்களின் கை அல்லது கால் தொட்டுவிட்டு அவர்களிடமிருந்து பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பி வருவதே கபடி ஆட்டமாகும்.
ஒருவேளை ரைடர் எதிரணியால் சூழ்ந்து பிடிக்கப்பட்டார் என்றால் ஆட்டம் இழப்பார். மூச்சு விடாமல் “கபடி கபடி அல்லது சடுகுடு சடுகுடு” என்று சொல்லிக்கொண்டே எதிராளியை தொட்டுவிட்டு திரும்பி வர வேண்டும். எதிரணியிடம் மாட்டிக்கொண்டால் ரைடர் ஆட்டமிழப்பார். தம் அணிக்குத் திரும்பும் முன் ரைடர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பார்.

ரைட்க்கான விதிமுறைகள்:
ரைடர் டிபெண்டர் அணியின் வீரர்கள் அல்லது இறுதி கோட்டை தொட்டுவிட்டு டிபெண்டர் அணியிடம் அகப்படாமல் வந்தால் ரைடர்ஸ் அணிக்கு ஒரு புள்ளி என்றும் அகப்பட்டுக் கொண்டால் டிபெண்டர் அணிக்கு ஒரு புள்ளி என்றும் வழங்கப்படும்.
ஒரு அணி தொடர்ந்து இரண்டு முறை ரைட் சென்று புள்ளிகளைப் பெறாமல் திரும்பி வந்தால் அடுத்து செல்லும் ரைட் Third Ride என்று சொல்லப்படும். இந்த ஆட்டத்தில் ரைடர் புள்ளிகளைப் பெற்றாக வேண்டும், ஒருவேளை புள்ளிகளைப் பெற தவறவிட்டால் எதிரணிக்கு ஒரு புள்ளி சென்றுவிடும், ரைடர் அவுட் என்ற முறையில் களத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.
எதிரணியின் களத்தில் ஏழு அல்லது ஆறு வீரர்கள் இருக்கும்போது ரைடர் Bonus line தாண்டித் தன் கால் தடத்தைப் பதித்தால் ஒரு புள்ளி ரைடர்ஸ் அணிக்குக் கிடைக்கும்.
ரைடர் எதிரணியிடம் மூன்று நபர் அல்லது அதற்கும் குறைவான வீரர்கள் இருக்கும்போது அகப்பட்டுக் கொண்டால் டிபெண்டர் அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். இதற்கு (Super Tackle) என்று பெயர்.
போட்டி முடிவதற்குள் அதிகமான புள்ளிகளை எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஒருவேளை போட்டி முடியும்போது இரு அணிகளும் சம புள்ளியில் இருந்தால் போட்டியானது வெற்றி தோல்வியின்றி டையில் (tie) முடியும், லீக் போட்டி என்றால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
நாக்அவுட் (Nnockout) போட்டி என்றால் டை பிரேக் முறை பின்பற்றப்படும். இரு அணிகளுக்கும் 5 ரைடுகள் அளிக்கப்படும், இந்த ரைட்களை பயன்படுத்தி எந்த அணி அதிக புள்ளிகளைப் பெறுகிறதோ அந்த அணி வெற்றி பெற்ற அணி என்று அறிவிக்கப்படும்.
போட்டி நேர முடிவில் மற்றும் டை ப்ரேக்கிலும் இரு அணிகளும் சம புள்ளிகள் எடுத்து இருந்தால் கோல்டன் ரைட் (golden raid) முறை பின்பற்றப்படும். டாஸ் செய்து வெல்லும் அணி ரைட் செல்லலாம் அல்லது டிபென்டர் ஆக இருக்க தேர்வு செய்யலாம். இந்த முறையில் ஒரே ஒரு ரைட் மட்டுமே வழங்கப்படும். ரைடர் எதிரணியை தொட்டுவிட்டால் ரைடர் அணி வெற்றி பெறும், ரைடர் எதிரணியால் பிடிபட்டுவிட்டால் டிபென்டர் அணிக்கு வெற்றி சென்றடையும்.
கோல்டன் ரைடிலும் புள்ளிகள் பெறவில்லை என்றால் எதிரணிக்கு கோல்டன் ரைட் வாய்ப்பு வழங்கப்படும்.
கபடி குழு:
1921ல் கபடி விளையாட்டிற்கு கமிட்டி மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டது. 1950 ல் அனைத்திந்திய கபடி கூட்டமைப்பு தொடங்கப்பட்டு தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றது. பின்பு 1972 ல் இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பாக மாற்றப்பட்டது.
1980 ல் முதன் முதலாக ஆசிய கபடி போட்டி நடைபெற்றது அதில் இந்தியா சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. முதல் கபடி உலக கோப்பை 2004 ல் தொடங்கியது. இந்தியா முதல் உலக கோப்பையைக் கை பற்றியது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி லீக்:
புரோ கபடி லீக் (ஸ்பான்சர்ஷிப் காரணங்களுக்காக விவோ புரோ கபடி என்றும் அழைக்கப்படுகிறது) அல்லது PKL என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது இந்திய ஆண்களுக்கான தொழில்முறை கபடி லீக் ஆகும். இது 2014 இல் தொடங்கப்பட்டது மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாகச் சீசன் 8 ஒத்திவைக்கப்பட்டது மற்றும் சீசன் 22 டிசம்பர் 2021 அன்று தொடங்கியது.
2006 ஆசிய விளையாட்டு போட்டிகளில் கபடி போட்டியின் பிரபலத்தால் லீக்கின் ஆரம்பம் தாக்கம் செலுத்தியது. போட்டியின் வடிவம் இந்தியன் பிரீமியர் லீக் என்று உருவெடுத்தது. புரோ கபடி லீக் franchise அடிப்படையில் பயன்படுத்துகிறது மற்றும் அதன் முதல் சீசன் 2014 இல் எட்டு அணிகளுடன் நடத்தப்பட்டது, அவை ஒவ்வொன்றும் 20,697,625 INR வரை கட்டணத்தைச் செலுத்தி சேர்ந்தன.
புரோ கபடி லீக் வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது, இது IPL கிரிக்கெட் போலல்லாமல், கபடியில் நன்கு அறியப்பட்ட வீரர்கள் குறைவாக இருந்தனர் என்று கருதப்பட்டது. இருப்பினும், கபடி அனைவராலும் மற்றும் பல சமூக அமைப்புகளில் பரவலாக விளையாடப்பட்டது, மேலும் லீக் குறிப்பிடத் தக்க ஈர்ப்பைப் பெற்றால் விளம்பரதாரர்கள் இலக்கு வைப்பதற்காக பல்வேறு வகையான கிராமப்புற மற்றும் பெருநகர பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடக்க சீசனை 43.5 கோடி பார்வையாளர்கள் பார்த்தனர், 2014 இந்தியன் பிரீமியர் லீக்கின் 55.2 கோடிகளுக்கு அடுத்தபடியாக, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் யு-மும்பா இடையேயான முதல் சீசன் இறுதிப் போட்டியை 8.64 கோடி பேர் பார்த்துள்ளனர். புரோ கபடி லீக்கின் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், லீக்கின் தாய் நிறுவனமான மஷால் ஸ்போர்ட்ஸில் 74% பங்குகளை வாங்குவதாக 2015 இல் அறிவித்தது.
2017 மற்றும் 2018–19 சீசனில், புரோ கபடி லீக் நான்கு புதிய அணிகளைச் சேர்த்தது, மேலும் அணிகளை “மண்டலங்கள்” எனப்படும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அதன் வடிவமைப்பை மாற்றியது. விரைவில் லீக் 2019 சீசனில் இருந்து அதன் வழக்கமான இரண்டு ரவுண்ட்-ராபின் வடிவத்திற்கு திரும்பியது.
Also, Read கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை பயணம்
புரோ கபடி லீக் சீசன்கள்
இதுவரை 8 சீசன்கள் நடைபெற்று முடிந்து விட்டது, இப்போது சீசன் 9 நடைபெற்று வருகிறது.
சீசன் 1:
8 அணிகளுக்கான வீரர்களின் முதல் ஒப்பந்தம் மற்றும் ஏலம் 20 மே 2014 அன்று நடைபெற்றது. சீசன் 26 ஜூலை 2014 முதல் 31 ஆகஸ்ட் 2014 வரை நடைபெற்றது. முதல் பதிப்பில் 8 அணிகள் பங்கேற்றன. முதல் ஆட்டம் ஜூலை 26 அன்று யு மும்பா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது மற்றும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 31 அன்று மும்பையில் நடைபெற்றது. முதல் புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 35–24 என்ற கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சீசன் 2:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் புரோ கபடி சீசன் 2, 18 ஜூலை 2015 முதல் ஆகஸ்ட் 23, 2015 வரை நடைபெற்றது. முதல் ஆட்டம் ஜூலை 18 அன்று யு மும்பா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையேயும், இறுதிப் போட்டி ஆகஸ்ட் 23 அன்று மும்பையில் யு மும்பா மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. புரோ கபடி லீக் 2015 சீசனில் யு மும்பா 36–30 என்ற புள்ளிகளுடன் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது.
சீசன் 3:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் புரோ கபடி சீசன் 3 இரண்டு பதிப்புகளைக் கொண்டிருக்கும். ஜனவரி-பிப்ரவரி 2016 ல் ஒரு முறையும், ஜூன்-ஜூலை 2016 ல் ஒரு முறையும் போட்டியை விளையாடுவது என்பது யோசனை. இதில் 8 அணிகளும் இருந்தன. டெல்லியில் நடந்த இறுதிப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
சீசன் 4:
நான்காவது சீசன் ஜூன் 25 முதல் ஜூலை 31, 2016 வரை நடந்தது, ஏற்கனவே உள்ள எட்டு அணிகள் பங்கேற்றன. ஆண்களுக்கான இறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்திப் பாட்னா பைரேட்ஸ் அணி 2வது முறையாகப் புரோ கபடி லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது. சீசன் 4 முதல் தொழில்முறை மகளிர் கபடி லீக், மகளிர் கபடி சவால் (WKC) தொடங்கப்பட்டது.
சீசன் 5:
2017 சீசன் புரோ கபடி லீக்கின் ஐந்தாவது பதிப்பாகும், இதில் உத்தரபிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் குஜராத் என்ற 4 புதிய அணிகள் உட்பட 12 அணிகள் இடம்பெற்றன. சச்சின் டெண்டுல்கர் தமிழ் தலைவாஸ் என்ற தமிழ்நாடு அணியின் இணை உரிமையாளராக உள்ளார். புரோ கபடி லீக் சீசன் 5, 28 ஜூலை 2017 அன்று தொடங்கியது.
KBD ஜூனியர்ஸ் எனப்படும் குழந்தைகளுக்கான கபடி போட்டி தொடங்கியது. போட்டிகள் நகரங்களின் பள்ளிகளுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதிப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 55–38 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்சை வீழ்த்தியது.
சீசன் 6:
2018 சீசன் புரோ கபடி லீக்கின் ஆறாவது பதிப்பாகும், இதில் 12 அணிகள் உள்ளன. பி மண்டலத்தில் முதலிடம் வகிக்கும் பெங்களூரு புல்ஸ் அணி இறுதிப் போட்டியில் 38-33 என்ற புள்ளி கணக்கில் ஏ மண்டலத்தில் முதலிடம் வகிக்கும் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தியது.
சீசன் 7:
2019 சீசன் புரோ கபடி லீக்கின் ஏழாவது பதிப்பாகும், இதில் 12 அணிகள் உள்ளன. அமைப்பாளர்கள் ‘மிகக் கடினமான சீசன்’ என, முந்தைய சீசனில் இருந்த மண்டல அமைப்பு அகற்றப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் இரண்டு முறை விளையாடும். முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தானாகவே அரையிறுதிக்கு முன்னேறும், மீதமுள்ள நான்கு அணிகள் எலிமினேட்டர்களில் மோதும்.
இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லியை 39–34 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி, அவர்களின் முதல் புரோ கபடி லீக் பட்டத்தை வென்றது.
சீசன் 8:
2021-22 சீசன் புரோ கபடி லீக்கின் எட்டாவது பதிப்பாகும். கோவிட் காரணமாக, வழக்கமான பயண கேரவன் வடிவம் ரத்து செய்து, சீசனின் அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்துவதாக மாற்றப்பட்டது. தபாங் டெல்லி இறுதிப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தித் தனது முதல் PKL பட்டத்தை வென்றது.
புரோ கபடி சீசன் 9:
2022 சீசன் புரோ கபடி லீக்கின் ஒன்பதாவது பதிப்பாகும். சீசனுக்கான ஏலம் ஆகஸ்ட் 5-6, 2022 வரை நீடித்தது. இந்தச் சீசனின் மிகவும் விலையுயர்ந்த பரிமாற்றம் பவன் குமார் செஹ்ராவத் ஆவார், இவரை தமிழ் தலைவாஸ் ரூ. 2.26 கோடிக்கு வாங்கியது, இது PKLக்கான சாதனைத் தொகையாகும். சீசன் 7 அக்டோபர் 2022 அன்று தொடங்கியது. சீசன் மூன்று கால்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் வெவ்வேறு இடத்தில் (கண்டீரவா உள்விளையாட்டு அரங்கம், ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாகம் மற்றும் கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம்) நடைபெறும்.

Also, Read விராட் கோலி வாழ்க்கை வரலாறு
PKL 9 அணிகள் பட்டியல்
- பெங்கால் வாரியர்ஸ்
- பெங்களூரு புல்ஸ்
- தபாங் டெல்லி
- குஜராத் ஜெயண்ட்ஸ்
- ஹரியானா ஸ்டீலர்ஸ்
- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
- பாட்னா பைரேட்ஸ்
- புனேரி பல்டன்
- தமிழ் தலைவாஸ்
- உ.பி. யோதாஸ்
- யு மும்பா
புரோ கபடி லீக் 2022 அட்டவணை
தற்போது சீசன் 9 போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தச் சீசனில், 6 அணிகள் தங்கள் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன. மீதமுள்ள 6 அணிகள் மட்டுமே போட்டியில் உள்ளன. ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மீதமுள்ள 4 அணிகள் (பெங்களூரு புல்ஸ் , தபாங் டெல்லி கே சி, யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ்) ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு இரண்டு அணிகள் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும். நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகி உள்ளனர்.
மீண்டும் நான்கு அணிகள் (அதாவது, ஏற்கனவே இரண்டு அரையிறுதியில் இருந்தன, இப்போது இரண்டு எலிமினேட்டர் சுற்றிலிருந்து நுழைந்துள்ளது) ஒன்றுக்கொன்று போட்டியிட்டு இறுதியாக இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். இறுதி போட்டி 17 டிசம்பர் 2022 அன்று நடைபெறும்.
அணி | விளையாடிய போட்டிகள் | வெற்றி | தோல்வி | டை பிரேக்கர் | புள்ளிகள் |
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் | 22 | 15 | 6 | 1 | 82 |
புனேரி பல்டன் | 22 | 14 | 6 | 2 | 80 |
பெங்களூரு புல்ஸ் | 22 | 13 | 8 | 1 | 74 |
உ.பி. யோதாஸ் | 22 | 12 | 8 | 1 | 71 |
தமிழ் தலைவாஸ் | 22 | 10 | 8 | 4 | 66 |
தபாங் டெல்லி | 22 | 10 | 10 | 2 | 63 |
ஹரியானா ஸ்டீலர்ஸ் | 22 | 10 | 10 | 2 | 61 |
குஜராத் ஜெயண்ட்ஸ் | 22 | 9 | 11 | 2 | 59 |
யு மும்பா | 22 | 10 | 12 | 0 | 56 |
பாட்னா பைரேட்ஸ் | 22 | 8 | 11 | 3 | 54 |
பெங்கால் வாரியர்ஸ் | 22 | 8 | 11 | 3 | 53 |
தெலுங்கு டைட்டன்ஸ் | 22 | 2 | 20 | - | 15 |
தமிழ் தலைவாஸ்
ஐந்தாவது பதிப்பிலிருந்து புரோ கபடி லீக்கில் சென்னையை தளமாகக் கொண்டு விளையாடி வருகிறது, ஆனால் அவர்கள் ஒருபோதும் சாம்பியன்ஷிப்பை வென்றதில்லை. இந்த ஆண்டு முதல் புரோ கபடி லீக் கோப்பையை வெல்லும் இலக்குடன், தமிழ் தலைவாஸ் Hi-Fi பிளேயர் பவன் குமார் செஹ்ராவத்தை ஒப்பந்தம் செய்து ஏலத்தில் எடுத்தார்கள். கடந்த மூன்று சீசன்களிலும் அவர் சிறந்த ரைடராக இருந்ததால், ரசிகர்கள் அவர்மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். கடந்த சீசனில் தலைவாஸ் அணிக்காக 18 ஆட்டங்களில் 108 ரெய்டு புள்ளிகளை அடித்த அஜிங்க்யா பவார் அவருக்கு நல்ல ஆதரவை வழங்குகிறார்.
தலைவாஸ் அணியில் பவன் குமார் செஹ்ராவத் தவிர கடந்த சீசன்களின் சிறந்த டிபென்டர் சாகர் ரதியும் இடம் பெற்றுள்ளார். புரோ கபடி லீக் 2022 ஏலத்திற்கு முன், தலைவாஸ் 11 வீரர்களை வைத்திருந்தது. கடந்த ஆண்டு சிறந்த டிஃபெண்டர் சாகர் ரதீ, அணிகளின் இரண்டாம் நிலை ரைடர் அஜிங்க்யா அசோக் பவார் ஆகியோர் பட்டியலில் இருந்தார். கவர் டிபென்டரான மோஹித்தும் பட்டியலில் இடம்பிடித்தார்.
ரைடர்கள்: பவன் குமார் செஹ்ராவத், அஜிங்க்யா அசோக் பவார், ஜதின், ஹிமான்ஷு, ஹிமான்ஷு சிங், நரேந்தர்
டிபெண்டர்கள்: சாகர், அங்கித், எம்.அபிஷேக், ஆஷிஷ், எம்.டி. ஆரிப் ரப்பானி, ஹிமான்ஷு, மோஹித், சாஹில், அர்பித் சரோஹா
ஆல்-ரவுண்டர்கள்: விஸ்வநாத் வி, தனுஷன் லக்ஷ்மமோஹா, கே அபிமன்யு
டீம் ஓனர் | மேஜிகா ஸ்போர்ட்ஸ் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
அணியின் கேப்டன் | பிஓ சுர்ஜித் சிங் |
அணி பயிற்சியாளர் | உதயகுமார் ஜே |
முகப்பு இடம் | ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை |
Also, Read பிபா வரலாறு- தொடக்கம் முதல் இன்று வரை
கபடி களத்திலேயே உயிரிழந்த விளையாட்டு வீரர்
கடலூர் மாவட்டம் அருகேயுள்ள மணாடிகுப்பம் பகுதியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் அவர்கள் முரட்டுக்காளை அணிக்காகக் களமிறங்கினர். விமல்ராஜ் திறமையான வீரர் மற்றும் பல போட்டிகளில் அற்புதமாக விளையாடி தனது அணிக்கு வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில், அவர் ரைடு சென்றபோது ஒருவர் விமலை பிடிக்கும் முயற்சியில் அவரது கழுத்தில் மேல் கால் பட்டவாறு விழுந்தார். விமல்ராஜ் அவரிடமிருந்து தப்பிவிட்டார் ஆனால் கடைசியில் எழ முயன்ற அவர், எழ முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தார். மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். கபடி வீரர் ஒருவர் களத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறுதியுரை
பல வீரர்களை உருவாகியுள்ள கபடி தமிழரின் விளையாட்டு என்று சொல்வதில் பெருமிதமாக உள்ளது. நம் தமிழரின் விளையாட்டை விட்டுவிடாமல் பேணிக்காப்பதே நமது கடமையாகும். இந்தப் புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.
Also, Read Complete Guide On ThopTV Live Cricket, Movies Free APK Download
Leave a Reply